Friday, February 25, 2005

புத்தக அறிமுகங்கள் - ஆர். பொன்னம்மாள் (5)

கடவுளின் கருணை, கல்லுக்குள் ஈரம், புடமிட்ட பொன், மனமாற்றம் முதலான நான்கு கதைகள் கொண்ட முதல் தொகுப்பு பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக வெளியிடப்பட்டது.

புடமிட்ட பொன்: ஒரு சிறுவன் வீட்டை விட்டுப் போனால் எப்படிபட்ட துன்பங்களை அனுபவிக்க நேரிடும், பெற்றோரை தண்டிப்பதாக எண்ணி அவன் வாழ்க்கையை அவலப்படுத்திக் கொள்ளும் விதத்தை சித்தரிக்கிறது. இதைப் படிக்கும் சிறுவர், சிறுமியர் வாழ்க்கை என்பது, திரைப்படம் அல்ல. பணக்காரன் கையில் செல்லக் குழந்தையாய் வாழ்வோம் என்பது கனவு என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தந்தை மகனை டேபிள் துடைப்பவனாகப் பார்த்தும் கூட கண்ணீரை சொரியாமல், கட்டிப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வா என்று அழைக்காமல் பேசுவது பெற்றோருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உணர்த்தலாம்.

கல்லுக்குள் ஈரம் பொல்லாதவனான ஒரு பையனின் கல் போன்ற மனதிலுள்ள ஈரத்தை ஒரு சிறுமி பொறுமை என்னும் உளி கொண்டு உடைத்து வெளிபடுத்தும் விதத்தை சொல்லும் கதை. (இரண்டாம் பரிசு என்பது சற்றே வயதான குழந்தைகளுக்கு என்பதாலே என்று விழாவில் திரு. எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

கருணை விழிகள்: மோகன் ஏழைச் சிறுவன். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பவன். பெற்றோரை இழந்த அவனுக்கு பாட்டி மட்டுமே உறவு. ஏழையாலும் பிறருக்கு உபகாரமாக வாழ முடியும் என்பதை உணர வைக்கும் நாவல். பாட்டியின் கருணை நிரம்பிய விழிகள் சாகாமல் மோகனோடு படிப்பவர் விழிகளையும் ஈரமாக்குகின்றன. இது வானதி பதிப்பகத்தாரின் 1984-ம் ஆண்டு வெளியீடு.

அன்பு உள்ளம்: ராஜேஷ¤ம், அவன் தங்கையும் விடுமுறையில் மாமா வீடு சென்று பின்னர் காணாமல் போய் பெற்ற அனுபவங்களைச் சொல்லும் சிறுவர் நாவல். 1978-இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு. இதை வெளியிட்டவர் கவர்னராயிருந்த திரு. பட்வாரி அவர்கள்.