Friday, February 25, 2005

அம்மா...

என்னுடைய அம்மா ஆர். பொன்னம்மாளை குறித்து எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, நாளை முதல் அவர்களின் வாழ்க்கையை சிறிது சிறிதாக பதிய முயலப் போகிறேன். அதற்கு முன் அவர்களின் தற்போதைய எழுத்துக்களை படிக்க விழைவோருக்கு, சில சுட்டிகள்.

காமகோடியில் எழுதுவதில் எனக்கு மிகவும் பிடித்தது 'பரமாசார்யாளின் பாதையிலே' . எளிய தத்துவங்கள்.

கிராம தேவதைகள், விரத விசேஷ தினங்கள் என மாதா மாதம் எழுதுகிறார். அவ்வப்பொழுது கோலங்கள் பகுதியும் காமகோடியில் வருகிறது.

நவமபர் மாதப் பகுதிகளையும் படித்து விட்டு காத்திருங்கள் :)

கடைசியாக, அவர்களின் சமீபத்திய புத்தகமான 'பக்த விஜயத்துக்கு' ஓர் அறிமுகம்.