Thursday, June 29, 2006

Vaikaasi Visaakam; Nammaazhvaar

June Special Days

2006 ஜூன் மாத விசேஷ தினங்கள்


9-6-2006 வைகாசி விசாகம்
வைபோக மாதமான வைகாசியில் விருச்சிகத்தில் சந்திரனும், ரிஷபத்தில் சூரியனும் சஞ்சரிக்கையில் அவதரித்தவர் சுப்ரமண்யர். சரவணப் பொய்கையாய் இருந்த உமாதேவியிடம் அக்னியால் விடப்பட்ட சிவதேஜஸ் ஆறுகுழந்தைகளாய் பிரிந்து கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்தி கேயனானார். வேலவர் உதித்ததும் சூரபத்மனின் இடது கண்ணும், புஜமும் துடித்ததாம். அது வரப்போகும் ஆபத்தை அறிவுறுத்தி யிருக்கிறது.
ஆறுகுழந்தைகளையும் சேர்த்தணைத்து ஒரு உருவாக்கி னாள் அம்பிகை. முருகனது ஜன்ம தினமான இன்று குமரன் குடிகொண்டிருக்கும் கோயில் களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடக்கும். அறுபடை வீடுகளில், கதிர்காமம், குன்றக்குடி போன்ற ஸ்தலங்களில் காவடிகளும், அலகு (சிறுவேல்) குத்திக் கொள்வதுமான பிரார்த்தனைகளை பக்தர்கள் நிறைவேற்றுவார்கள். ஸ்ரீலங்காவில் கண்டி, மலேஷியாவில் பினாங்கு, பத்துமலை, சிங்கப்பூர் போன்ற கடல் கடந்த நாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் காவடி, கரகாட்டம், அலகு குத்தி தேர் இழுப்பது போன்றவற்றுடன் வைகாசி விசாகம் கொண்டாடப் படுகிறது.

திருச்செந்தூருக்குத் தெற்கே எட்டு கி. மீட்டர் தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம். அங்கே சைவ வேளாள மரபில் வந்த முத்தணைந்த பெருமாள் பிள்ளை என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அந்நாட்டுச் சிற்றரசரின் தலைமை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இந்த முருகபக்தர். ஞான நூல்களை ஓதுவிக்கும் ஆசானாகவும் இருந்தார். தினமும் இராக்கால வழிபாட்டிற்கு திருச்செந்தூர் போவது இவர் வழக்கம். இவரை ஞானியார் என்றே அனைவரும் அழைத்தனர்.

ஒரு மழைக்கால இருட்டு. வயது முதிர்ந்த பருவம். பலத்த தூறல். திருச்செந்தூர் செல்லும்போது எப்படியோ வழி தவறிவிட்டது. தடுமாறித் திகைத்தபோது முன்னால் ஒரு உருவம் சேகண்டியைத் தட்டிக் கொண்டு, கையில் லாந்தருடன் சென்றது. ‘சண்முக விலாசம்’ வந்ததும் உருவம் மறைந்து விட்டது. பெருமாள் பிள்ளை மெய் சிலிர்த்தபடி போத்திகளிடம் இச்சம்பவத்தை விவரித்தார்.

அன்றிரவு அவர் கனவில் குமரப்பெருமான் தோன்றி, “அன்ப! இனி நீ திருச்செந்தூர் வரவேண்டாம். நாமே நாள் தோறும் இராக்கால தீபாராதனை ஆனதும் உன் படுக்கையறைக்கு வந்து விடுகிறோம்” என்றருளினார்.

அதுபோல் தினமும் அருகில் ஒருவர் படுத்திருப்பதை உணர்ந்திருக்கிறார் ஞானியார். அவர் சாப்பிட்டதும் தாம்பூலம் போடுவது வழக்கம். ஒருநாள் தம்பல எச்சிலோடு உறங்கிவிட்டார். பாதி இரவில் எழுந்து சன்னல் வழியாகத் துப்ப முயற்சிக்க, வேகமாக வழிந்த தம்பலச்சாறு அருகிலிருந்தவர் மேல்பட்டு விட்டது போல் தோன்றியது. மனப் பிரமை என்று விட்டு விட்டார் ஞானியார்.

மறுநாள் காலை போத்திகள் ஆறுமுகப் பெருமானின் ஆடையில் தாம்பூல எச்சில் பட்டிருப்பதைத் தர்மகர்த்தாவிடம் தெரிவித்தனர். தர்ம கர்த்தா “பரிகார ஹோமம் நடத்தி சிறப்பு அபிஷேகம் செய்து வேறு ஆடை சாற்றுங்கள். அதைப் பிறகு விசாரிப்போம்” என்றார். அப்படியே செய்தனர் போத்திகள்.

அன்றிரவு தர்மகர்த்தா கன வில் முருகன் தோன்றி நடந்ததைக் கூறி “யாரும் தாம்பூல எச்சில் உமிழ்ந்து அடாத செயல் புரிய வில்லை” என்று எடுத்துரைத்தார். இப்படி செந்தில் ஆண்டவன் படுத்துறங்கிய இடம் படுக்கைக் கோயில் என்று வழங்கப்பட்டு, ‘சக்தி வேல் ஸ்தானம்’ செய்யப்பட்டு அங்கு இன்றும் தூப, தீப ஆராதனை நடை பெற்றுவருகிறது. ஞானியாரின் சந்ததியார் பூஜை செய்கிறார்கள்.

திருச்செந்தூர் கோயில் அதிகாரிகள் ஒரு குத்து விளக்கை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி என்று பெயர் பொறித்து உபயமாகத் தந்திருக்கிறார்கள்.

திருச்செந்தூர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. ஞானியார் கருவறைக்குள் நுழைகிறார். போத்திமார்கள் “ஞானியாரே! இப்படிச் செய்யலாமா?” என்று கூற, அடுத்த கணம் ஞானியார் அங்கே இல்லை. அதே நேரம் குலசேகரன் பட்டினத்தில் ஞானியார் தன் பூத உடலை நீத்திருந்தார்.

இப்படிக் கந்த பெருமான் அருள் பெற்ற பக்தர்கள் ஏராளம். நாமும் இன்று, அவர் தாள் பணிந்து நன்மை யெல்லாம் பெறுவோம்!



--------------------------------------------------------------------------------
9-6-2006 திருவாய் மொழிப் பிள்ளை திரு நக்ஷத்திரம்
பாண்டிய நாட்டில் குண்டிகை என்ற ஊரில் பிறந்த இவர் தனது சிற்றன்னையிடம் வளர்ந்தார். தமிழில் நல்ல புலமையுடையவர். சிறந்த பேச்சாளர். பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணி புரிந்தவர். இவரது குரு, கூர குலோத்தம தாஸர். இவர் திருக்குருகூரில் அடர்ந்த காடுகளை வெட்டி நாடாக்கினார். திருநகரியில் இராமானுஜருக்குத் தனிக்கோயில் கட்டுவித்து கோயிலைச் சுற்றி வீதிகள் அமைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களை அதில் குடியேற்றினார். அந்த ஊருக்கு இராமானுஜ சதுர்வேதி மங்கலம் என்று பெயர். ஸ்ரீசைலேசர், திருமலை ஆழ்வார் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இவருடைய சீடர்களில் முக்கியமானவர் மணவாள மாமுனிகள். “ஸ்ரீரங்கம் சென்று முப்பத்தாறாயிரப்படி வியாக்கி யானத்தை உபன்யாசம் செய்” என்று அவருக்கு உத்தரவிட்டவர் இவரே. ஸ்ரீரங்கநாதர் ஒரு வருஷ காலம் அதைக் கேட்டுக் கொண் டிருந்தார். அந்த ஒரு வருஷமும் கோயிலில் எந்த உற்சவமும் நடக்கவில்லை!

பிள்ளை லோகாச்சாரியாருக்குப் பிறகு வைஷ்ணவ குருபீடத்தை அலங்கரித்தவர் இவர். இன்று அம்மகானின் அவதார தினம்.


--------------------------------------------------------------------------------

9-6-2006 நம்மாழ்வார் ஜன்மதினம்
தாமிரபணி நதி தீரத்தில், திருக்குருகூரில் காரியாருக்கும், உடைய நங்கையாருக்கும் உதித்தவர் மாறன். தவமிருந்து பெற்ற சிசு அழவுமில்லை! பால் குடிக்கவுமில்லை! மகாவிஷ்ணு வின் கட்டளைப்படி திருக்குறுங்குடி யில் ஆதிசேஷன் ஒரு புளிய மரமாக தோன்றியிருந்தார். அதில் பெரிய பொந்து. அதில் பதினாறு ஆண்டுகள் தவமிருந்தார் மாறன். திருமால் ஆணைப்படி சேனை முதலி பூலோகம் வந்து இவருக்கு உபதேசித்தார்.

வடதிருப்பதிகளில் nக்ஷத் ராடனம் செய்த மதுர
கவியாழ்வார் அயோத்தியில் தரிசனம் முடித்து தென்திசை

நோக்கி கைகூப்ப ஒரு பேரொளி அவரை ஈர்த்தது. ஒளிவந்த வழியே பயணமானார் மதுர கவியார். அந்த ஒளி திருக்குருகூரில் புளிய மரப் பொந்துக்கு அவரை அழைத்து வந்தது. பொந்தினுள்ளே தவம் புரிபவர் மகான் என்றுணர்ந்த மதுரகவியார், தன் கைகளைத் தட்டி “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்க “அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்” என்று முதல் முறையாக திருவாய் மலர்ந்தருளினார் மாறனார்.

மதுரகவியார் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து “அடியேனை ஆட் கொள்ள வேண்டும்” என்று இறைஞ்சினார். “நாம் பகவானை அடையக் கூடிய பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம். தாங்கள் அதைப் பட்டோலையில் பதிப்பீராக” என்றார் மாறனார். எல்லோராலும் நேசிக்கப்பட்ட அவர் நம்மாழ்வார் எனப் பெயர் பெற்றார். அவருக்கு எவரும் அறியா வண்ணம் கருடன் மீதமர்ந்து வந்து காட்சி தந்தார் திருமால்.

இவர் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாய் மொழி ஆகியவற்றைப் பாடியிருக்கிறார். வகுளாபரணன் சடகோபன், பராங்குசன், குருகைப் பிரான், திருநாவீறுடைய பிரான் போன்ற பல பட்டப் பெயர்கள் இவருக்கு உண்டு. இராமகாதை இயற்றிய கம்பர் இவரைப் போற்றி சடகோபர் அந்தாதி என்ற பாமாலை புனைந்திருக்கிறார்.

இம்மகான் பிறந்த இப்புனித நாளில் இவரை வேண்டி வித்தை யையும், ஞானத்தையும் ஸ்ரீமந்நாரா யணரின் அருளையும் பெறுவோம்.



--------------------------------------------------------------------------------

10-6-2006 காஞ்சி ஸ்ரீமஹாப் பெரியவாள் ஜெயந்தி
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாக
12.2.1907 ல் தனது 13ஆவது வயதில் பொறுப் பேற்றார் ஸ்ரீசந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். தனது இளம் வயதிலேயே வேத சாஸ்திர புராணங்கள், உபநிஷத்துக்கள், அத்வைத வேதாந்த சித்தாந்தங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்த ஞானி இம்மகான். பார்வைக்கு எளியவராய், கருணையே உருவாய் திகழ்ந்த இவர் அனைத்து மக்களாலும் ஸ்ரீபரமாச்சார்யாள் என்று போற்றி வணங்கப்பட்டவர். ஸ்ரீ பரமாச்சார்யாள் வேத சம்மேளனங்கள், வேதாகம சில்பசதஸ் போன்ற மகா நாடுகளை நடத்தி வேத
விற்பன்னர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள், ஓதுவார்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கிகௌரவித்திருக் கிறார். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப் பாட்டு போன்ற கிராமியக் கலைகள் புத்துயிர் பெற்று இன்று மக்களால் பாராட்டப்படுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் இவர். இந்திய, அயல்நாட்டு மொழிகள் 17-ல் புலமை பெற்றிருந்த இம் மஹாப் பெரியவர் தம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களிடம் அவரவர் மொழியிலேயே பேசி அவர்களை வியக்க வைத்ததுண்டு. மஹாத்மா காந்தி தனது தென்னிந்திய விஜயத்தின் போது ஸ்ரீபரமாச்சார் யாளை தரிசித்து நெடுநேரம் அளவளாவியிருக்கிறார். சநாதன தர்மமாகிய ஹிந்து மதத்தின் மேன்மையையும் பெருமைகளையும் விளக்கி ஸ்வாமிகள் ஆற்றிய அருளுரைகள் ஏராளம். “ப்ராயா ணோன் முகேமயி அநாதேனூ” என்று ஆதிசங்கரர் இயற்றிய ஸுப்ரமண்ய புஜங்க வாசகத்தை (அனாதையான நான் நெடும்
பயணம் கிளம்பும் போது துணையாக குஹனே! தயாளுவே நீ வர வேண்டும்) சொல்லாமல் அவர் தலை சாய்ப்பதில்லை. அவரே அநாதை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு வரும் கடமையை தன் மனதில் காமம், குரோதம் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அவரது ஞான வாக்கியங்களை கடைப்பிடிப்பதே அவருக்குச் செய்யும் பாதாஞ்சலியாகும்.

--------------------------------------------------------------------------------

12-6-2006 திருஞான சம்பந்தர் ஜன்ம நக்ஷத்திரம்
சீர்காழி nக்ஷத்திரத்தில் கவுணியர் குலத்தில் சிவபாத இருதயர்-பகவதி தம்பதியருக்கு சம்பந்தர் உதித்தார். மூன்று வயது நிரம்பியது. ஒருநாள் தந்தை நீராடச் செல்கையில் தாமும் பிடிவாதமாகப் பின் தொடர்ந்தார். பிரம்ம தீர்த்தப் பொய்கையில் தந்தை மூழ்கவும் கரையிலிருந்த சம்பந்தர் தந்தையைக் காணாமல் “அம்மே! அப்பா” என்று அழ, அம்பாள் தோன்றி பொற்கிண்ணத் திலிருந்து ஞானப்பாலை ஊட்டினார். குழந்தையின் வாயிலிருந்து பால் வழிந்தது. அம்பிகையிடம் பால் குடித்ததால்

‘ஞானசம்பந்தர்’ ஆன குழந்தையை, நீரிலிருந்து வெளிப்பட்ட சிவபாத ஹிருதயர் “யார் தந்த பாலை அருந்தினாய்?” என்று கேட்டு மிரட்டினார்.

ஆகாயத்தைச் சுட்டிச் காட்டி தோடுடைய செவியன் என்று பாசுரம் பாடினார் ஆளுடைப் பிள்ளை. திருக்கோலக்காவில் இவருக்கு இவருக்கு பொற்றாளம் அருளினார் ஈசன். திருநெல்வாயில் சந்திரசேகரப் பெருமான் சம்பந்தர் பாதம் நோகுமென்று அமர்ந்து வர முத்துச் சிவிகையும், வெயில், மழை பனியிலிருந்து காக்க முத்து வெண்குடையும், கட்டியம் கூற ஊதும் முத்துச் சின்னமும் கொடுத்தார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவரது மனைவி மதங்க சூளாமணி யாரும் சம்பந்தர் அனுமதியோடு அவர் கூடவே தங்கி அவரது பாடல்களை யாழில் இசைத்தனர். பாணரின் சுற்றத்தவர் “சம்பந்தர் எத்தனை கடுமையான பாடலைப் பாடினாலும் நம்பாணர் அதை யாழில் மீட்டி விடுகிறார்” என்று கர்வமாகப் பேசுவதைக் கேட்டார் பாணர்.

“யாழில் மீட்ட முடியாத ஒரு பாசுரத்தை இயற்ற வேன்டும்” என்று சம்பந்தரிடம் கோரினார் பாணர்.

“மாதர் மடப்பிடி” என்ற பாடலைப் பாடினார் சம்பந்தர். அது யாழ் நரம்பில் அடங்கவில்லை! யாழ்ப்பாணருக்கு நிஜமாகவே பயமாகிவிட்டது. இனிமேல் தன்னால் சம்பந்தரின் பாடல்களை யாழில் இசைக்கவே முடியாதோ என்று எண்ணியவர், வருத்தத்தி னால் யாழை உடைக்க ஓங்கினார். அவரைத் தடுத்த ஆளுடைப் பிள்ளை “சிந்தையிலும் அடங்காத உமாமஹேஸ்வரரின் பெருமைகளை யாழில் அடக்கி விடமுடியுமா? இயன்ற அளவு வாசியும்” என்று கூறி யாழைத் திருப்பிக் கொடுத்தார்.

திருச்சாத்த மங்கையில் திரு நீலநக்க நாயனார் இல்லத்தில் அவர் விருப்பப்படி பாணரோடு தங்கியி ருந்தார். திருப்புகலூரில் புஷ்ப கைங்கரியம் செய்யும் முருக நாயனாரோடு நட்புக் கொண்டார். இந்நால்வரும் ஒரே மாதம் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தது போல் திருநல்லூரில் சம்பந்தருடைய திருமண நாளன்று தோன்றிய ஜோதியில் ஒரே நேரத்தில் இறைவ னோடு ஐக்கியமானார்கள்.


--------------------------------------------------------------------------------


14-6-2006 ஸ்ரீகுமரகுருபரர் அவதார தினம்
தாமிரபரணி நதிக்கரையில் ஸ்ரீ வைகுண்டம் என்ற ஸ்தலத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் வேளாளர் குடியில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் புத்திரனாக உதித்தவர் இவர். ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை. திருச்செந்தூர் முருகன் கோயிலுக் குச் சென்று சன்னதி முன் மைந் தனைக் கிடத்தி “சண்முகா! ஒரு மண்டலம் விரதமிருக்கிறோம். குழந்தைக்குப் பேசும் சக்தியைக் கொடு” என்று பிரார்த்தனை செய்தனர் பெற்றோர். தினமும் அதிகாலை எழுந்து கடலிலும்,
நாழிக் கிணற்றிலும் ஸ்நானம் செய்து திருநீறு தரித்து செந்தி லாண்டவன் மேல் பாமாலை தொடுப்பார்கள். கோயில் சார்த்திய பின் பிரசாதத்தை உண்டு “ஓம் சரவண பவாய நம.” என தியானித் திருப்பார்கள். 48-ஆவது நாள் நான்காம் ஜாமத்தில் குமர குருபரரின் கனவில் அர்ச்சகர் வடிவில் ஆறுமுகன் பிரத்யட்சமாகி அவரைத் தட்டி எழுப்பி நாக்கை நீட்டச் சொல்லி சடாக்ஷரத்தை எழுதினார். பிறகு “விரைந்து விஸ்வ ரூப தரிசனத்துக்கு வருக” என்றருளி மறைந்தார்.

குமரகுருபரர் எழுந்து “அம்மா! அப்பா, எழுந்திருங்கள்” என்று பெற்றோரை உலுக்கி நடந்ததைச் சொல்ல அவர்கள் ஆனந்தத்தில் மிதந்தனர். “கந்தர் கலி வெண்பா” பாடினார் குமர குருபரர். இவரது “மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழ்” திருமலை நாயக்கர் முன் அரங்கேறிய சமயம் அம்பிகை நாயக்கர் மடியில் சிறு பெண்ணாக வந்து அமர்ந்து ரசித்ததுடன் ‘காலத்தோடு கற்பனை கடந்து’ என்ற பாடலுக்கு இவர் விளக்கம் அளிக்கையில் ஒரு முத்துமாலை யைப் பரிசாகவும் அளித்து மறைந்தாள். இன்று இவர் பாடல்களைப்பாடி அம்பிகை, கந்தன் இருவரின் அருளையும் பெறுவோம்.


--------------------------------------------------------------------------------


22-6-2006 கூர்ம ஜெயந்தி
“வீரியத்தையும் ஆயுளையும் தரக்கூடிய அமிர்தத்தை அருந்த பாற்கடலைக் கடைய வேண்டும். அது தேவர்களால் மட்டும் முடியாது. அசுரர்களிடம் நயமாகப் பேசி அவர்கள் உதவியையும் பெற வேண்டும்” என்று தேவேந்திர னுக்கு யோஜனை சொன்னார் மகாவிஷ்ணு. அதன்படி தானவர் களிடம் சென்று “வாருங்கள் பாற்கடலைக் கடைந்து அமிர் தத்தை எடுத்து ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொள்ள லாம்” என்று அழைத்தான் இந்திரன்.
அசுரர்கள் தேவர்களை ஏமாற்றி அமிர்தத்தைப் பறித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து மந்தர மலையைத் தூக்கி வந்து கடலில் நிறுத்தினர். வாசுகி என்ற நாகத்தை வேண்ட அது கயிறாக சம்மதித்தது. அசுரர்களைத் தலைப்பக்கம் பிடிக்கும்படி செய்தார் திருமால். ஓஷதிகளைப் போட்டு பாற்கடலைக் கடையத் தொடங் கினர். மந்தரகிரி அமிழ ஸ்ரீமந்நாரா யணர் பிரம்மாண்டமான ஆமை யாகி தன் முதுகால் முட்டுக் கொடுத்து நெம்பினார். மலைமேலெழுந்து சுழன்ற. பகவான் கூர்மமாக அவதரித்த நன்னாள் இது. ஜயவந்தர் என்ற ஹரி பக்தர் சாக்குப்பையில் கட்டி சமுத்திரத்தில் வீசப்பட்டார். பரந்தாமன் ஆமை வடிவாகி சாக்குப்பை கடலில் மூழ்காதபடி செய்து அவரைக் கரைசேர்த்தார். ஒரு முறை பண்டரிபுரம் போக முடியாமல் பக்தர்கள் தவித்தபோது நதியில் பாலமாக அமைந்து அவர்கள் பயணம் செய்ய உதவி யிருக்கிறார் பகவான். இந்நன் நாளில் பெருமாளை வழிபட்டால் சம்சார சாகரத்திலிருந்து அவர் நம்மை கரைசேர்க்க அருள் புரிவார் என்பது திண்ணம்.


- ஆர். பி